Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாராளுமன்ற கட்டிட வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்? - நீதிபதிகள் கேள்வி

பாராளுமன்ற கட்டிட வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்? - நீதிபதிகள் கேள்வி

By: Karunakaran Mon, 07 Dec 2020 6:35:38 PM

பாராளுமன்ற கட்டிட வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்? - நீதிபதிகள் கேள்வி

பழைய பாராளுமன்றம் உள்ள நிலையில் தற்போது 800 கோடி மதிப்பில் புதிய பாராளுமன்ற வளாகத்தை கட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டதில், அதனை டாடா நிறுவனம் கைப்பற்றியது. பாராளுமன்றம் கட்டுவதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பிரதமர் மோடி வரும் 10ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாராளுமன்ற கட்டிடம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

construction,parliament,building case,supreme court ,கட்டுமானம், பாராளுமன்றம், கட்டிட வழக்கு, உச்ச நீதிமன்றம்

அதன்படி, பாராளுமன்ற கட்டிடம் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருக்கும்போது புதிய பாராளுமன்ற கட்டிடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள், பாராளுமன்ற கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்? கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதை சொலிசிட்டர் ஜெனரல் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி உத்தரவிட்டனர்.

Tags :