Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த தேதியில் ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

இந்த தேதியில் ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 01 Aug 2023 4:18:30 PM

இந்த தேதியில் ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு : தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் அமைந்து உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

employment camp,erode ,வேலைவாய்ப்பு முகாம்,ஈரோடு

நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோகல்வி தகுதி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமின் மூலமாக ஒரே நாளில் 3, 000 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அன்றே தேர்வானவர்களுக்கு ஆஃபர் லெட்டர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/172307310019 என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :