Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 03 Oct 2023 12:49:17 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூர் : அக்.7 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300+ நிறுவனம் பங்கேற்பு ... தமிழகத்தில் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே அதன்படி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற அக்டோபர் 7ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

employment camp,tirupathur ,வேலைவாய்ப்பு முகாம் ,திருப்பத்தூர்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெறுவதால் கட்டாயமாக வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10, 12-ம் வகுப்பு, பொறியியல், மருத்துவம், ஐடிஐ முடித்த அனைத்து இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இருக்கும் இளைஞர்கள் அனைத்து கல்வி சான்றிதழ், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் எடுத்து வரும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :