Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டில் செப்.30 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டில் செப்.30 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 28 Sept 2023 5:20:23 PM

செங்கல்பட்டில் செப்.30 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு : முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ப்பு ... தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செப்.30 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் பற்றி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

private sector employment camp,chengalpattu , தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்,செங்கல்பட்டு

அதில் முகாமானது வருகிற செப்- 30ம் தேதி செங்கல்பட்டில் தாம்பரம் வட்டத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் 150-கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனை அடுத்து 8,10,12, டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் கல்வி தகுதி கொண்டவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். முகாமிற்கு செல்லவுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்களின் வேலைவாய்ப்பு முகாம் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :