ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின
By: Nagaraj Thu, 22 Sept 2022 07:55:53 AM
ஆஸ்திரேலியா: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ஆஸ்திரேலியா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை 14 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது. இதனையடுத்து நேற்றும் 230- க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 100-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிருடன் இருந்துள்ளது. அவற்றை பத்திரமாக மீட்டு கடலில் விடுவதற்கான நடவடிக்கையில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்த அனைத்து திமிங்கலங்களும்
உணவு தேடி புதிய இடத்திற்கு வந்துள்ளது. ஆனால் திடீரென உடல்நிலை பாதிப்பால்
கரை ஒதுங்கி இருக்கலாம். என கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 470 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.