பொறுப்பிலிருந்து விலக உள்ளேன்... பரூக் அப்துல்லா திட்டவட்டம்
By: Nagaraj Sat, 19 Nov 2022 1:01:15 PM
காஷ்மீர்: பொறுப்பிலிருந்து விலக உள்ளேன்... ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகவுள்ளதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். புதிய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்கும் நேரம் இது. கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம்.
இது ஒரு ஜனநாயக நடைமுறை கட்சிக்கு இளம் தலைமை வரவேண்டும் என
விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அடுத்த மாதம் நடக்கவுள்ள அக்கட்சிக்கான தலைவர் தேர்தலில் பரூக்
அப்துல்லா போட்டியிட மாட்டார்.
பரூக் அப்துல்லா
1981முதல் 2002 வரை மற்றும் 2006 முதல் தற்போது வரை கட்சி தலைவராக பதவி
வகித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் அடுத்த தலைவராக
பரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா தேர்வு செய்யப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பரூக் அப்துல்லா, கட்சியின் புரவலராகப்
பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.