Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வருத்தம் அடைந்தேன் - பாகிஸ்தான் பிரதமர்

ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வருத்தம் அடைந்தேன் - பாகிஸ்தான் பிரதமர்

By: Karunakaran Sat, 08 Aug 2020 11:31:00 AM

ஏர் இந்தியா விமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகுந்த வருத்தம் அடைந்தேன் - பாகிஸ்தான் பிரதமர்

துபாயில் இருந்து ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தது. விமானம் தரையிறங்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

air india,plane crash  pakistan prime minister,imran khan ,ஏர் இந்தியா, விமான விபத்து பாக்கிஸ்தான் பிரதமர், இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், கேரளா மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையும், அதனால் அப்பாவி மக்கள் உயிரிழந்ததையும் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமையை கொடுப்பார் என பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் போராடி வரும் நிலையில், சிலர் விபத்துகளாலும் அவதியடைந்து வருகின்றனர்.


Tags :