Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து சம்பவத்தால் மிகவும் துயரப்படுகிறேன் - அமெரிக்கா

கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து சம்பவத்தால் மிகவும் துயரப்படுகிறேன் - அமெரிக்கா

By: Karunakaran Sat, 08 Aug 2020 1:50:30 PM

கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து சம்பவத்தால் மிகவும் துயரப்படுகிறேன் - அமெரிக்கா

துபாயில் இருந்து நேற்று 190 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தது. இந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது, விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 173 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

plane crash,kerala,usa,air india ,விமான விபத்து, கேரளா, அமெரிக்கா, ஏர் இந்தியா

தற்போது கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் இதயம் வெளியே செல்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கேரளா மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையும், அதனால் அப்பாவி மக்கள் உயிரிழந்ததையும் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|