நலமாக இருக்கிறேன் .. நாஞ்சில் சம்பத் டிவிட்
By: vaithegi Mon, 30 Jan 2023 09:43:57 AM
சென்னை: திராவிட இயக்க பேச்சாளரான நாஞ்சில் சம்பத்துக்கு நரம்பியல் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவரும் அவரின் உடல்நிலை பற்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக கேட்டறிந்தார்.
மேலும் அதுமட்டுமின்றி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ் ஆகியோரை தொடர்புகொண்டு, நாஞ்சில் சம்பத்துக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்.
எனவே இதன் விளைவால் நாஞ்சில் சம்பத் தற்போது உடல்நிலை தேறி, நலமடைந்துள்ளார். இதனை அடுத்து இது பற்றி நாஞ்சில் சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில்,
“முதலமைச்சரின் தனிக் கருணையில் இன்று புதிதாய் பிறந்தேன். அவரது பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.