Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் நன்றி கடன்பட்டுள்ளேன்... உக்ரைன் அதிபரின் உருக்கம்

நான் நன்றி கடன்பட்டுள்ளேன்... உக்ரைன் அதிபரின் உருக்கம்

By: Nagaraj Tue, 07 June 2022 6:47:18 PM

நான் நன்றி கடன்பட்டுள்ளேன்... உக்ரைன் அதிபரின் உருக்கம்

உக்ரைன்: ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கடன்பட்டுள்ளேன். உங்களையும் கவனித்து கொள்ளுங்கள் என்று போர் முனைக்கு சென்ற உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீரர்களை நேரடியாக சந்தித்து பேசி நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை ஊக்கப்படுத்தினார். இதனால் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொன்பாஸ் நகரில் போர் முனையில் உள்ள படைகளை சந்தித்து பேசினார். ரஷ்ய துருப்புகள் ஆக்ரோசமுடன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் கிழக்கு பகுதியில் அமைந்த தொன்பாஸ் தொழிற்சாலை மண்டலத்தில் உள்ள ராணுவ முகாம்களுக்கு சென்றார்.

flexibility,thanks credit,soldiers,met and talked,battle area ,நெகிழ்ச்சி, நன்றி கடன், வீரர்கள், சந்தித்து பேசினார், போர் பகுதி

லிசிசன்ஸ்க் பகுதிக்கும் சென்று வீரர்களுடன் உரையாடினார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரில் ரஷ்ய துருப்புகள் முன்பு கைப்பற்றும் நோக்கில் நுழைந்தன. ஆனால், உக்ரைனிய படைகளின் எதிர் தாக்குதலால் பின்வாங்கி வருகின்றன.

பாக்முத் என்ற இடத்திற்கு சென்ற ஜெலன்ஸ்கி, ராணுவ வீரர்களிடம் பேசும்போது, உங்களுடைய சிறந்த பணி, சேவை, எங்கள் அனைவரையும் மற்றும் நமது நாட்டை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கடன்பட்டுள்ளேன். உங்களையும் கவனித்து கொள்ளுங்கள் என்றார். அதிபரின் இந்த பேச்சு வீரர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :