Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எனக்கு எதிரான போராட்டமாக பார்க்கவில்லை... ஓ.பி.எஸ்., கருத்து

எனக்கு எதிரான போராட்டமாக பார்க்கவில்லை... ஓ.பி.எஸ்., கருத்து

By: Nagaraj Thu, 20 Oct 2022 9:02:55 PM

எனக்கு எதிரான போராட்டமாக பார்க்கவில்லை... ஓ.பி.எஸ்., கருத்து

சென்னை: எனக்கு எதிரான போராட்டமாக இதை நான் கருதவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நேற்று (அக்டோபர் 19) அதிமுகவினர் நடத்திய போராட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு எதிரான போராட்டமாக இதை நான் கருதவில்லை” என்றார்.

aiadmk,obs.,aghtar,chennai ,அதிமுக, ஓபிஎஸ்., போராட்டம், சென்னை

முதல்வருடன் ஒரு மணி நேரம் பேசியது குறித்து கேட்டதற்கு, “ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் பழனிசாமிக்கு சவால் விட்டுள்ளனர். முன்னதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த தமிழக சட்டப்பேரவைத் தலைவரைக் கண்டித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், தமிழக முதல்வரின் உத்தரவை மீறி ஓபிஎஸ்க்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுகிறார் என்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|