பீகாரை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க தீர்மானம் எடுத்துள்ளேன் - பிரதமர் மோடி
By: Karunakaran Wed, 28 Oct 2020 1:15:23 PM
பீகார் மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதியில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். தர்பங்காவில் உள்ள ராஜ மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பீகார் மக்கள் மாநிலத்தில் காட்டு தர்பாரை கொண்டு வந்தவர்களை, பீகாரை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவும், அவர்களின் ஆட்சியில் குற்றங்கள் பரவலாக இருந்ததாகவும் கூறினார்.
இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், வாக்காளர்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.