Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிறைய இழந்து விட்டேன்; அருண் ஜேட்லி நினைவு நாளில் பிரதமர் டுவிட்

நிறைய இழந்து விட்டேன்; அருண் ஜேட்லி நினைவு நாளில் பிரதமர் டுவிட்

By: Nagaraj Mon, 24 Aug 2020 7:37:46 PM

நிறைய இழந்து விட்டேன்; அருண் ஜேட்லி நினைவு நாளில் பிரதமர் டுவிட்

நிறைய இழந்து விட்டேன்... முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் நினைவு நாளையொட்டிப் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், நண்பனை இழந்ததால் நிறைய இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடலின் பல உறுப்புக்கள் செயலிழந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாள் உயிரிழந்தார்.

அவர் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டிப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், அருண் ஜேட்லி விடாமுயற்சியுடன் நாட்டுக்குத் தொண்டாற்றியவர். அறிவு, சட்ட நுணுக்கம், ஆளுமை ஆகியவற்றால் புகழ்பெற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

arun jaitley,remembrance,prime minister modi,lost ,அருண் ஜேட்லி, நினைவேந்தல், பிரதமர் மோடி, இழந்து விட்டேன்

அருண் ஜேட்லியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய காணொலியையும் இணைத்துள்ளார்.

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அருண் ஜேட்லி நினைவுநாளையொட்டி அவர் நாட்டுக்கு ஆற்றிய தொண்டை நினைவுகூர்ந்துள்ளனர்.

Tags :