Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்னிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் இல்லை... கவர்னர் தமிழிசை விளக்கம்

என்னிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் இல்லை... கவர்னர் தமிழிசை விளக்கம்

By: Nagaraj Tue, 11 July 2023 8:15:15 PM

என்னிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் இல்லை... கவர்னர் தமிழிசை விளக்கம்

ஐதராபாத்: தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று தெலுங்கானா கவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

approval,bill,governor,information,pending,tamil soundararajan ,ஒப்புதல், கவர்னர், தகவல், தமிழிசை சவுந்தரராஜன், நிலுவை, மசோதா

தம்மிடம் ஒப்புதலுக்கு வந்த மசோதாக்களில் 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மீதமுள்ள அனைத்து மசோதாக்களும் அரசின் விளக்கம் மற்றும் தகவலுக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் அந்த செய்திக்குறிப்பில் விளக்கமளித்துள்ளார்.

பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும், மசோதா தொடர்பான செய்திகளை வெளியிடும் முன் கவர்னர் மாளிகையில் செய்தி நிறுவனங்கள் விளக்கம் கேட்குமாறும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|