Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் - அமித்ஷா அறிவிப்பு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் - அமித்ஷா அறிவிப்பு

By: Karunakaran Fri, 14 Aug 2020 6:57:21 PM

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் - அமித்ஷா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 2ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மத்திய அமைச்சரவையில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் உறுப்பினர் உள்துறை மந்திரி அமித்ஷாவே ஆவார். அதன்பின் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு பின் அமித்ஷா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

recover,corona damage,amitsha,minister of the interior ,மீட்பு , கொரோனா சேதம், அமித்ஷா, உள்துறை அமைச்சர்

கடந்த 9ந்தேதி கொரோனா பரிசோதனை முடிவில் அமித்ஷா குணமடைந்து விட்டார் என பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் அதனை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்தது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை எதுவும் நடத்தவில்லை என தெரிவித்தது.

தற்போது அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்படி சில நாட்கள் அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :