Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை திரும்பப்பெற உள்ளேன் - டிரம்ப்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை திரும்பப்பெற உள்ளேன் - டிரம்ப்

By: Karunakaran Fri, 09 Oct 2020 2:54:28 PM

கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை திரும்பப்பெற உள்ளேன் - டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படையினர் அனைவரையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுவதும் வெளியேறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படையினரை அமெரிக்கா வேகமாக குறைத்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகள் உள்ள படைவீரர்களை அமெரிக்காவிற்கே திரும்ப அழைப்பது அதிபர் டிரம்பின் கடந்த தேர்தல் அறிக்கையாக இருந்தது. அதன் பகுதியாக ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து பெரும்பாலான வீரர்களை அமெரிக்கா குறைத்துள்ளது.

american soldiers,afghanistan,christmas,trump ,அமெரிக்க வீரர்கள், ஆப்கானிஸ்தான், கிறிஸ்துமஸ், டிரம்ப்

தற்போது தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப்பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் உள்ள படைவீரர்களை திரும்பப்பெறும் முயற்சியில் அதிபர் டிரம்ப் இறங்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 4 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் அனைவரையும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அமெரிக்கா திரும்ப அழைத்து வர உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் டுவிட்டர் தனது பக்கத்தில், ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள குறைவான எண்ணிக்கையிலான நமது வீரமிகு படைவீரர்கள் அனைவரையும் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் திரும்பப்பெற உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் உள்பட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :