Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

By: Nagaraj Sun, 01 Jan 2023 3:35:53 PM

விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

டெல்லி: விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால், மற்ற தொழில்களும் செழிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

நாடு புத்தாண்டில் நுழைந்துள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் 50 முதல் 60 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர்.

எனவே பருவமழை விவசாயிகளுக்கு நன்றாக இருந்தால், வரும் ஆண்டு நம் அனைவருக்கும் சிறப்பாக இருக்கும். விவசாயம் செழித்தால், மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். வரும் ஆண்டில் நாட்டின் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால், மற்ற தொழில்களும் செழிக்கும்.

congress leader sharad pawar,farmers, ,தலைவர் சரத் பவர், வாழ்த்து, விவசாயிகள்

அவர்களும் நல்ல நாட்களைக் காண்பார்கள். புதிய சீர்திருத்தம் இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதியாளராக மாற்றும். எனவே தொழில் மற்றும் வர்த்தகத்தில் புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இப்போது யார் ஆட்சியில் இருந்தாலும், அரசியல் வேறுபாடுகளைக் களைந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை. இதனால் நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஜனவரி மாத இறுதியில் எதிர்க்கட்சிகள் கூடி இது குறித்து விவாதிக்கும் என்று கூறினார்.

Tags :