Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்கிறேன்; பிரதமர் அறிவிப்பு

பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்கிறேன்; பிரதமர் அறிவிப்பு

By: Nagaraj Wed, 12 Aug 2020 10:48:32 AM

பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்கிறேன்; பிரதமர் அறிவிப்பு

பெய்ரூட் துறைமுக கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில், 160 பேர் உயிரிழந்த நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக அரசைக் கண்டித்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதில் கலவரம் ஏற்பட்டது.

lebanon,resignation,explosion,announcement,prime minister ,லெபனான், ராஜினாமா, வெடி விபத்து, அறிவிப்பு, பிரதமர்

அரசின் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி 3 அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் தியாப், தனக்கு முன்பு இருந்த ஊழல் அரசியல்வாதிகளே வெடி விபத்திற்கு காரணம். லெபனான் மக்களை இறைவன் காப்பாற்றுவார் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், வெடி விபத்து சம்பவத்திற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Tags :