கிணற்றில் குதித்தாலும் குதிப்பேன்... காங்கிரசில் சேர மாட்டேன் என்று சொன்னேன்
By: Nagaraj Sat, 17 June 2023 11:11:51 PM
மும்பை: பண்டாரத்தில் மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை ஆய்வு செய்யும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கலந்து கொண்டார்.
விழாவில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாந்த் சிக்கர் என்ற தலைவர் காங்கிரஸில் சேருவதற்கான தனது ஆலோசனையை நிராகரித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
அவர் பேசும்போது:- ஸ்ரீகாந்த் சிச்கர் ஒருமுறை என்னிடம் ‘ நீ நல்ல கட்சி தொண்டன், தலைவன். நீ காங்கிரசில் சேர்ந்தால் உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ‘ என்றார். நான் அவரிடம், நான் கிணற்றில் குதித்தாலும் குதிப்பேன், காங்கிரசில் சேரமாட்டேன் என்றேன். ஏனெனில் எனக்கு பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தில் அதிக நம்பிக்கை இருந்தது,
எனவே அதற்காக தொடந்து உழைப்பேன். காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் பல முறை உடைந்து உள்ளது. நமது நாட்டின் ஜனநாயக வரலாறை நாம் மறக்க கூடாது. கடந்த காலம் மூலம் நாம் எதிர்காலத்துக்கு கற்றுக்கொள்ள வேண்டும். தனது 60 ஆண்டுகால ஆட்சியின் போதும் வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் முழங்கி வந்தது.
ஆனால் அவர்கள் தங்கள் சொந்த லாபத்துக்காக கல்வி நிறுவனங்களை தான் திறந்தார்கள். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் இந்திய பொருளாதாரத்தில் சிறந்த நிலையை அடைந்து உள்ளது. நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்ததைவிட 2 மடங்கு அதிகமான நலத்திட்ட பணிகளை 9 ஆண்டில் பா.ஜனதா அரசு செய்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.