Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளுடன் வாழ விரும்புகிறேன்... நளினியின் நெகிழ்ச்சி தகவல்

மகளுடன் வாழ விரும்புகிறேன்... நளினியின் நெகிழ்ச்சி தகவல்

By: Nagaraj Sun, 13 Nov 2022 1:19:02 PM

மகளுடன் வாழ விரும்புகிறேன்... நளினியின் நெகிழ்ச்சி தகவல்

சென்னை: என் மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புகிறேன், என் மகள் சொல்வதை வைத்து இனி என்ன செய்ய வேண்டும் என்று நடவடிக்கைகளை எடுப்பேன் எனநளினி தெரிவித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையான நளினி செய்தியாளர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக மக்களுக்கு நன்றி. பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு 6 பேரும் விடுதலையாவோம் என நம்பிக்கை இருந்தது, தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

housewife,nalini,my family,i am going to live,i am happy ,குடும்பத்தலைவி, நளினி, எனது குடும்பம், வாழப்போகின்றேன், மகிழ்ச்சி

இத்தனை காலமாக எங்களுக்கு உதவிய ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றிகள். அதேபோல மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நான் இனிமேல் குடும்பத் தலைவியாகவே இருக்கப் போகிறேன்.

இனிமேல் எனது குடும்பம், எனது கணவர், எனது குழந்தைக்காகவே வாழப் போகிறேன். இவர்களுக்கானது என்னுடைய வாழ்க்கை. 6 பேரும் அவரவர் குடும்பத்துடன் சேரவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

என் மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புகிறேன், என் மகள் சொல்வதை வைத்து இனி என்ன செய்ய வேண்டும் என்று நடவடிக்கைகளை எடுப்பேன் என கூறியுள்ளார்.

Tags :
|