Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என எச்சரிக்கிறேன்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என எச்சரிக்கிறேன்

By: Nagaraj Sun, 02 Oct 2022 10:21:40 PM

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என எச்சரிக்கிறேன்

நெல்லை: மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என எச்சரிக்கிறேன் என நெல்லையில் நடந்த திராவிட நட்புக் கழக அறிமுக் கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.


நெல்லை வண்ணார்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் திராவிட நட்பு கழகம் அறிமுக கூட்டம் பேரவை துணைச் செயலாளர் சிங்கராயர் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:

பேருந்தில் பாட்டி ஒருவர் ஓசிக்கு செல்ல மாட்டேன் என்று கூறி வைரலான விவகாரத்தில் தற்போது உண்மை வெளிப்பட்டுள்ளது அந்தப் பாட்டியின் பெயர் துளசி அம்மா அவரை அதிமுககாரர்கள் பணம் கொடுத்து அவ்வாறு பேச செய்துள்ளனர் இது தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதிமுகவினருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்களை அழிப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டு நீங்கள் அழிந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களையும் காப்பாற்ற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் இதுதான் உண்மை. யாரெல்லாம் பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று கருதுகிறார்களோ அவர்களெல்லாம் கைகோர்க்கும் நேரம் இது. இந்த சூழ்நிலையில் நாம் நல்ல முடிவெடுக்க வில்லை என்றால் அழிந்து விடுவோம்.

Tags :
|