Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு எல்லைப் பிரச்சினைகளில் ஆதரவாக இருப்பேன் - ஜோ பிடன்

இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு எல்லைப் பிரச்சினைகளில் ஆதரவாக இருப்பேன் - ஜோ பிடன்

By: Karunakaran Mon, 17 Aug 2020 2:58:44 PM

இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு எல்லைப் பிரச்சினைகளில் ஆதரவாக இருப்பேன் - ஜோ பிடன்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

இந்தியாவின் 74-வது சுதந்திரதினவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டபோது, அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு பிரச்சினைகளிலும், எல்லைப் பிரச்சினைகளிலும், அச்சுறுத்தல்களிலும் அந்நாட்டுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

internal border issues,india,joe biden,america president

இதுகுறித்து ஜோ பிடன் பேசுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு முன்னணியில் இருந்த நான்தான் பணியாற்றினேன். அப்போது நான் கூறியது, இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்புநாடுகளாக மாறினால், கூட்டாளிகளாக இருந்தால், இந்த உலகம் பாதுகாப்பானதாக மாறும் என்றேன். நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு பிரச்சினைகளிலும், எல்லைப் பிரச்சினைகளிலும், அச்சுறுத்தல்களிலும் அந்நாட்டுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறினார்.

மேலும் அவர், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும், பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றம், உலக சுகாதார பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்போம். அதுமட்டுமல்லாமல் இரு நாடுகளிலும் ஜனநாயகத்தை வலுப்பெறுவதற்கு உழைப்போம். ஏனென்றால் இரு நாடுகளிலும் பன்முகத்தன்மைதான் பரஸ்பர வலிமை. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஆழம் அதிகரிக்கும், இரு நாடு மக்களுக்கு இடையிலான நட்புறவும் வளரும் என்று கூறினார்.

Tags :
|