Advertisement

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் - டிரம்ப்

By: Karunakaran Fri, 27 Nov 2020 1:29:34 PM

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் - டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி அதிபர் தேர்தலில் நடந்து முடிந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் பைடன் 306 வாக்குகளும், நடப்பு அதிபரான டொனால்டு டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றனர். அதிபரை தேர்வு செய்வதற்கு, எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும்.

ஆனால் டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார். தேர்தல் மோசடி குறித்த ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்து, தேர்தலை ஒப்புக்கொள்ள அதிபர் டிரம்ப் மறுத்துவிட்டார். இந்நிலையில், பைடன் அதிபர் என தேர்வாளர் குழு சான்றளித்து விட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா? என நிருபர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.

america,white house,trump,joe biden ,அமெரிக்கா, வெள்ளை மாளிகை, டிரம்ப், ஜோ பிடென்

அதிபர் தேர்தலில் பைடனிடம் தோல்வி அடைந்த பின் டிரம்ப் முதன்முறையாக டிரம்ப் பேட்டி அளிக்கையில், வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் நிச்சயம் நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன். அது உங்களுக்கும் தெரியும். ஆனால் வருகிற ஜனவரி 20ந்தேதி வரை பல்வேறு விசயங்கள் நடைபெறும் என நான் நினைக்கிறேன். பெரிய அளவில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், வாக்களிக்கும் உள்கட்டமைப்பில் நாம் 3வது உலக நாடு போல் இருக்கிறோம். ஹேக்கிங் செய்ய கூடிய கணினி சாதனங்களை நாம் உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். அதிபராக பைடனை எலக்டோரல் காலேஜ் தேர்வு செய்கிறதென்றால், அது பெரிய தவறாகி விடும். இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, உயர்மட்ட அளவில் மோசடிகள் நடந்துள்ளன என கூறியுள்ளார்.


Tags :
|