விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார்
By: Nagaraj Sat, 31 Oct 2020 12:34:38 PM
விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இளைஞர்களின் நாயகனாக இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என பிரபலமானவர். இந்நிலையில் தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார்.
இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் சகாயம் இருந்து வருகிறார். இன்னும் 3 ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு கோரியுள்ளார்.
இவருக்கு திட்டமிட்டே தொடர்ந்து சில சங்கடங்களை அரசு ஏற்படுத்தி வருவதாக
கூறப்படுகிறது. எனினும் எதற்காக ராஜினா செய்கிறார் என்ற உறுதியான தகவல்
வெளியாகவில்லை.
அதேநேரத்தில் சகாயம் ஏற்கனவே அரசியலில் இறங்க
வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர் பதவியை ராஜினாமா
செய்யும் நிலையில், அடுத்தாண்டு தேர்தல் வருவதால் அவர் அரசியலுக்கு
வரவேண்டும் என இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை டுத்து வருகின்றனர்.
இதனிடையே
தமிழக அரசில் மிகவும் நேர்மையான அதிகாரி என அனைவரிடமும் பெயர் பெற்ற ஐஏஎஸ்
அதிகாரி சகாயம் ராஜினாமா விவகாரம் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து
சமூக சேவையாற்றி வருகிறார்.