Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் கேள்விகள், அதிருப்திகள் இருக்கம் - ப.சிதம்பரம்

ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் கேள்விகள், அதிருப்திகள் இருக்கம் - ப.சிதம்பரம்

By: Karunakaran Tue, 25 Aug 2020 5:02:17 PM

ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் கேள்விகள், அதிருப்திகள் இருக்கம் - ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ப.சிதம்பரமும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள் அனைவரும் கட்சியின் நிலை குறித்து கவலை தெரிவித்துதான் கடிதம் எழுதினார்கள் என்று கூறினார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரும் தங்கள் மனதில் இருக்கும் விஷயங்களைப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதாக ராகுல் காந்தி யாரையும் சொல்லவில்லை. ராகுல் காந்தி குற்றம்சாட்டிப் பேசியதாக சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

political party,question,dissatisfaction,p chidambaram ,அரசியல் கட்சி, கேள்வி, அதிருப்தி, ப சிதம்பரம்

காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்கள் தங்கள் மனதில் இருக்கும் கவலைகளைத் தெரிவித்தார்கள், அவர்களின் குறைகள் அடையாளம் காணப்பட்டன. அங்கு எப்போதுமே அதிருப்தி இருக்கிறது. உண்மையில், சில அதிருப்திகள் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. அதிருப்தி இல்லாவிட்டால், மாற்றம் என்ற ஒன்று நடக்கவே நடக்காது. ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், அங்கு கேள்விகள், அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

மேலும் அவர், எல்லாம் நன்றாக இருக்கிறது, நன்றாகச் செல்கிறது என்று ஒருபோதும் சொல்வதில்லை. கடலில் உள்ள அலைகள் எப்போதாவது அமைதியாக இருந்து நீங்கள் கண்டதுண்டா? ஆதலால், கேள்விகள், அதிருப்திகள் கட்சிக்குள் எப்போதும் இருக்க வேண்டும். செயற்குழுக் கூட்டத்தில் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். இது கட்சியை முன்னோக்கி நகர்த்திச் சென்று, இன்னும் வீரியமாகச் செயல்பட வைக்கும் என்று தெரிவித்தார்.

Tags :