Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2ஆயிரம்; காங்கிரஸ் வாக்குறுதி

கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2ஆயிரம்; காங்கிரஸ் வாக்குறுதி

By: Nagaraj Fri, 28 Apr 2023 8:03:33 PM

கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2ஆயிரம்; காங்கிரஸ் வாக்குறுதி

கர்நாடகா: ராகுல் காந்தி அறிவிப்பு... கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 மற்றும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்தது. 24-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 3 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தக்ஷினா கன்னடா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

congress,promise,housewives,victory,karnataka ,காங்கிரஸ், வாக்குறுதி, இல்லத்தரசிகள், வெற்றி, கர்நாடகம்

அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல, பல கோடிகளை செலவழித்து எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் வாங்கி இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்கப்பட்டதாக பாஜக எம்எல்ஏக்களே கூறியுள்ளனர்.

அமைச்சர்கள் எந்த வேலை ஆக வேண்டும் என்றாலும் 40 சதவீதம் கமிஷன் வாங்கினர். மக்களின் வரிப்பணத்தை பாஜகவினர் கல்வி, சுகாதாரத் தேவைக்காக பயன்படுத்தவில்லை. மாறாக அவர்களுடைய சில கோடீஸ்வர நண்பர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியுள்ளனர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 மற்றும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :