Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

By: Karunakaran Sat, 25 July 2020 8:16:52 PM

தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் கொடி உயர்த்தியதால் அவரது துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பின் சபாநாயகர், பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுக்கு கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பினார்.

இதனை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினார். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் கோலட் இறங்கியுள்ளார். இதற்காக மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சில முறை சந்தித்து, சட்டசபையை உடனடியாக கூட்ட வலியுறுத்தி வருகிறார்.

ashok gehlot,rajastan,prime minister,residence ,அசோக் கெஹ்லோட், ராஜஸ்தான், பிரதமர், குடியிருப்பு

தற்போது, ஜெய்ப்பூரில் தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அசோக் கெலாட் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்மந்திரி கெலாட், தேவைப்பட்டால் நாம் டெல்லி ராஷ்டிரபதிபவன் சென்று குடியரசுத்தலைவரையும் சந்திப்போம். மேலும், தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு நாம் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்று கூறினார்.

இந்நிலையில் கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை 4 மணியளவில் சந்திக்க முதல்மந்திரி அசோக் கெலாட் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. அதன்பின், ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சி தலைவர் குலேப் சந்திர கட்டாரியா மற்றும் பாஜக தலைவர் சதிஷ் புனியா இருவரும் கவர்னரை சந்திக்க உள்ளதால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags :