- வீடு›
- செய்திகள்›
- மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும் ...முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும் ...முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
By: vaithegi Wed, 27 July 2022 12:02:59 PM
சென்னை, பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்பின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம். நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும். உடல்நலனை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து சொல்கிறேன். நான் மாணவர்களிடம் உரையாடிய போது 5 பேரிடம் காலை உணவு சாப்பிட்டீர்களா என கேட்டேன். அதில் 3 பேர் காலை உணவு சாப்பிடவில்லை என கூறினர். நான் கூட கல்லூரிப் பருவத்தில் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்று சாப்பிடாமல் செல்வேன்.
மாணவர்கள் யாரும் காலையில் சாப்பிடாமல் வரவே கூடாது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன் என அவர் கூறினார்.