Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மந்திரிகள் ஒற்றுமையாக இல்லையெனில் கொரோனா நோயாளிகள் தெருவில் உயிரிழக்கலாம் - குமாரசாமி

மந்திரிகள் ஒற்றுமையாக இல்லையெனில் கொரோனா நோயாளிகள் தெருவில் உயிரிழக்கலாம் - குமாரசாமி

By: Karunakaran Fri, 03 July 2020 1:07:21 PM

மந்திரிகள் ஒற்றுமையாக இல்லையெனில் கொரோனா நோயாளிகள் தெருவில் உயிரிழக்கலாம் - குமாரசாமி

கர்நாடகத்தில் படுக்கைகள் பற்றாக்குறையால், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகள் அனுமதிக்காமல் நிராகரிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பொதுமக்களை பாதுகாப்பதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், ஒன்றும் செய்ய முடியாமல் மந்திரிகள் விழிபிதுங்கியுள்ளதாகவும், கேரளா கொரோனாவை தடுப்பதில் வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளது. ஆனால் அந்த மாதிரியை பயன்படுத்தாமல் மந்திரிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்து நேரத்தை வீணடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

corona patients,corona virus,ministers,kumaraswamy ,கொரோனா நோயாளிகள், கொரோனா வைரஸ், அமைச்சர்கள், குமாரசாமி

மந்திரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு குறிப்பாக மந்திரிகள் ஒற்றுமையாக செயல்படாவிட்டால், கொரோனா நோயாளிகள் தெருவில் விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்று குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர், கொரோனாவை தடுப்பதில் நான் ஏற்கனவே அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினேன். அதை அமல்படுத்த அரசு நடவடிக்கை வேண்டும். அரசியல் செய்ய இது சரியான தருணம் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

Tags :