வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைவோம்
By: Nagaraj Fri, 06 Nov 2020 09:26:56 AM
மீண்டும் இணைவோம் என்று ஜோபைடன் தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த 2017- ஆம் ஆண்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி முகத்தில் உள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், வரலாற்று சிறப்பு மிக்க பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவோம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் நிர்வாகம் வெளியேறியது.
எனது தலைமையில் அமையும் அடுத்த நிர்வாகம் இன்னும் 77 நாட்களில் மீண்டும்
அந்த ஒப்பந்தத்தில் இணையும்”என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தான்
அதிபராக பதவியேற்றால் முதல் நடவடிக்கையாக பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைவதற்கான
நடவடிக்கையை எடுப்பேன் மறைமுகமாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.