Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்த கும்பல் சிங்கப்பூரில் கைது

சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்த கும்பல் சிங்கப்பூரில் கைது

By: Nagaraj Thu, 17 Aug 2023 11:15:49 AM

சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்த கும்பல் சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனை செய்த கும்பலைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனை நடப்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்த போலீசார் 736 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

money laundering,illegality,corruption,online gambling,testing ,பணப்பரிமாற்றம், சட்ட விரோதம், ஊழல், ஆன்லைன் சூதாட்டம், சோதனை

அதிரடி சோதனை மூலமாக சீனாவைச் சேர்ந்த சிலர் உள்பட 10 வெளிநாட்டவரை கைது செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் ரொக்கப்பணம் , சொத்து ஆவணங்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

400க்கும் மேற்பட்ட காவலர்கள் திட்டமிட்டு இந்த சோதனையை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊழல், ஆன்லைன் சூதாட்டம் போன்ற பல சட்டவிரோத காரியங்களுக்காக பெரும் அளவிலான பணப்பரிமாற்றம் நடத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :