துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மின்னொளியில் ஜொலித்த காந்தியடிகள் உருவம்
By: Nagaraj Sat, 03 Oct 2020 3:06:58 PM
துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட காந்தியடிகளின் உருவம் ஒளிரவிடப்பட்டு அனைவரையும் கவர்ந்தது.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில், அவரது உருவம் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது.
கருப்பு நிறத்தில் தோன்றிய காந்தியடிகளின் உருவம் பிறகு வானளவு தோன்றி,
மறையும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வெகுவாக
கவர்ந்தது.
தொடர்ந்து, காந்தியின் பல்வேறு வாசகங்களும் அதில்
தோன்றிய நிலையில், இறுதியாக தேசிய கொடியில் காந்தியடிகளின் முகம்
பிரதிபலிக்கும் வகையில், புர்ஜ் கலிபா கட்டிடம் வண்ண விளக்குகளால்
ஜொலித்தது.
Tags :
image |
slogans |