Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இம்பா சமூக தொண்டு நிறுவன குடும்ப விளையாட்டு விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

சென்னையில் இம்பா சமூக தொண்டு நிறுவன குடும்ப விளையாட்டு விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

By: Nagaraj Mon, 22 May 2023 6:17:37 PM

சென்னையில் இம்பா சமூக தொண்டு நிறுவன குடும்ப விளையாட்டு விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

சென்னை: சென்னையில் இம்பா சமூக தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பி்ல் இம்பா குடும்ப விளையாட்டு விழா சிறப்பாக நடந்தது.

நிகழ்ச்சிக்கு இம்பா அமைப்பின் பொருளாளர் அப்பு சந்திரசேகர் தலைமை வகித்தார். சீசெல்ஸ் தொழிலதிபர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கிவைத்து பேசியதாவது;

family sports festival,minister,participated,flagged,organized ,குடும்ப விளையாட்டு விழா, அமைச்சர், பங்கேற்பு, கொடியசைத்தார், ஏற்பாடு

இம்பா அமைப்பு எங்களுக்கு (தமிழக அரசுக்கு) புதிதல்ல. கொரோனா பெருந்தொற்று காலத்தில் எங்களுடன், களத்தில் இறங்கி சமூக தொண்டாற்றிய அமைப்புதான் இம்பா. மேலும் ஈரோடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில், எங்களுக்கு பக்க பலமாக இருந்து வெற்றி வாய்பை, பெறுவதற்கு முக்கிய பங்காற்றியது இம்பா அமைப்பு.

மேலும் இம்பா சமூக மக்கள் முன்வைத்த கோரிக்கையான ஈரோட்டில் புற்றுநோய்க்கான மருத்துவமனை ஏற்படுத்துவது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழக அரசு.

இதுபோல் சமூக,சமுதாய சேவைகளை சிறப்பாக செய்துவரும் இம்பா அமைப்பு, குடும்ப விளையாட்டு விழா மூலம் உடற்பயிற்சி மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும். மாணவர்களையும், இம்பா உறுப்பினர்களையும்,சீரான உடற்பயிற்சி செய்து, தன்னையும் சமுதாயத்தையும் பேணிக்காக்கும்படி, கேட்டுக்கொள்கிறேன்.

family sports festival,minister,participated,flagged,organized ,குடும்ப விளையாட்டு விழா, அமைச்சர், பங்கேற்பு, கொடியசைத்தார், ஏற்பாடு

தமிழக அரசு சார்பி்ல் நடத்தப்படும் மாரத்தான் போட்டிகளில் இம்பா உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள், பெரும்திரளாக கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்பாடுகளை இம்பா விளையாட்டு குழுவினர் செய்திருந்தனர். இதில் 120 மாணவர்களும்,150க்கு மேற்பட்ட இம்பா உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்த ஆனந்தம் செல்வகுமாருக்கு விழாக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags :