Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முடிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முடிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு

By: vaithegi Tue, 02 May 2023 2:34:53 PM

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு முடிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னை: மாணவர்களுக்கான தேர்வு முடிவினை வரும் மே 5 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவிப்பு .... தமிழகத்தில் 1 முதல் 9- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதாவது, தமிழகத்தில் வழக்கமாகவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலமாக ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

exam result,students , தேர்வு முடிவு ,மாணவர்கள்

மேலும், 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகைப் பதிவு, மாவட்ட அளவில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர் எடுத்துள்ள மதிப்பெண் மற்றும் இறுதித் தேர்வில் குறைந்தது 25 மதிப்பெண் என்கிற அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற மே 5-ம் தேதிக்குள் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு முடிவை பெற்றோரை அழைத்து தெரியப்படுத்த வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

Tags :