பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை .. கலந்தாய்வு குறித்த முக்கிய தகவல்
By: vaithegi Thu, 25 Aug 2022 8:06:36 PM
சென்னை: பொறியியல் படிப்பில் 2-ம் ஆண்டில் நேரடியாக சேரவும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. டிப்ளமோ, பி.எஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேர தகுதியுடையோர்கள் ஆவார்கள்.
இதை அடுத்து தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 65,000 இடங்களுக்கு சுமார் 24,062 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 20,574 பேர் தகுதியுடையோர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இணையதளம் வாயிலாக கவுன்சிலிங்க நடத்த திட்டமிடப்பட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அதன் படி சிறப்பு கலந்தாய்வு 29 மற்றும் 30ம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதியும் நடைபெற உள்ளது. கலந்தாய்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 993661901, 9843153330 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிலையில் பொறியியல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாக காரணத்தால் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.