உரிமைத்தொகை .. குடும்ப தலைவிகளுக்கு முக்கிய அறிவிப்பு
By: vaithegi Thu, 12 Oct 2023 4:35:38 PM
சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்.15 முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் குடும்ப தலைவிகளுக்கு செப்.14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அதே போன்று, இம்மாதமும் வருகிற அக்.14 ஆம் தேதி அனைத்து குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கும் ரூ.1000 வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அக்.15 ஆம் தேதி ஞாற்றுக்கிழமை என்பதால் அனைவருக்கும் அக்.14 ஆம் தேதியே உரிமைத்தொகை வழங்கப்பட்டுவிடும்.
இந்த நிலையில், வருகிற அக்.14 ஆம் தேதி வங்கி கணக்கில் பணம் வரவில்லையெனில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம். அதாவது, கடந்த மாதம் பணம் பெறப்பட்டு இந்த மாதம் ரூ.1000 கிடைக்கவில்லையெனில் உள்ளூர் கிராம அதிகாரிகள், அல்லது நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் பெறப்பட்டவரிடம் முறையிடலாம்.
மேலும், வங்கிகள் மூலமாக பணம் பெறப்பட்டதும் குடும்ப தலைவிகள் வேறு கணக்கிற்கு மாற்றம் செய்து கொள்ளலாம் அல்லது பணமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.