Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு

சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு

By: vaithegi Thu, 03 Aug 2023 2:00:26 PM

சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு

இந்தியா: இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் அதன் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓரளவுக்கு சிலிண்டரின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதன் இடையில் சிலிண்டரையே வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வரும் போது சிலிண்டரை டெலிவரி செய்யும் ஏஜென்சிக்கும் தனியாக பணம் கொடுக்க வேண்டியுள்ளதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

agency ,சிலிண்டர் ,ஊழியர்கள் ,ஏஜென்சி

இந்த நிலையில், டெலிவரி செய்யும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரசீதில் உள்ளதை காட்டிலும் கூடுதலாக எவ்வித தொகையையும் வசூலிக்க கூடாது என்றும், பொதுமக்களும் டெலிவரி ஏஜென்சிகளுக்கு கூடுதல் கட்டணம் தரக்கூடாது என்றும் பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

அதாவது, பொதுமக்கள் சிலிண்டரை புக் செய்யும் போதே சிலிண்டரின் விலையுடன் டெலிவரிக்கும் சேர்த்து பணத்தை செலுத்துகின்றனர். இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் ஏஜென்சிக்கே சென்று கேஸ் சிலிண்டரை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் டெலிவரி தொகை 29.26 ரூபாய் போக மீதமும் உள்ள தொகையை மட்டும் ஏஜென்சிக்கு அனுப்பினால் போதுமானது.

Tags :