Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தாண்டு கொண்டாட்டம் ... கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்

புத்தாண்டு கொண்டாட்டம் ... கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்

By: vaithegi Thu, 29 Dec 2022 2:20:26 PM

புத்தாண்டு கொண்டாட்டம்   ...    கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்

சென்னை: தமிழக காவல் துறை அதிகாரி டிஜிபி சைலேந்திர பாபு வர இருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் உள்ள கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக தற்போது இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த BF .7 என்ற வைரஸின் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பரவலை தடுக்கும் விதமாக மக்கள் பொது வெளிகளை தவிர்த்து, வீட்டில் இருந்து புத்தாண்டை குடும்பத்துடன் வீட்டில் கொண்டாட வேண்டும். டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 பாதுகாப்பு பணிகளுக்காக 90 ஆயிரம் காவல் துறையினர், 10 ஆயிரம் ஊர்க் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

regulations,new year,dgp shailendra babu ,விதிமுறைகள்,புத்தாண்டு , டிஜிபி சைலேந்திர பாபு

இதனை அடுத்து இந்த 2 நாட்களும் கடல் நீரில் இறங்குவதை தவிர்க்க வேண்டும். காவல் துறையினர் தமிழகம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். இதனால் மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இதையடுத்து இதனை மீறுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொது வெளியில் சிறப்பிக்க அனுமதி இல்லை. மேலும், ஏதேனும் அவசர உதவிகளுக்கு காவல் துறையினரை தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :