விவசாயிகளுக்கு முக்கிய அப்டேட் ..பிஎம் கிசான் திட்டம்..
By: Monisha Fri, 08 July 2022 6:31:16 PM
இந்தியா: பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் விவசாயிகளின் நிதியுதவிக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 31 தேதி அன்று வெளியிட்டார். அதன்படி இந்தத் திட்டத்தின் 12வது தவணையை எந்த இடையூறும் இன்று பெற வேண்டுமானால் உங்கள் கேஒய்சி புதுப்பிக்கப்பட்டதா இருக்கப்பட வேண்டும். இல்லையெனில் 12வது தவணை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்இதற்கான கடைசி தேதியை அரசாங்கம் 31 ஜூலை 2022 வரை நீட்டித்துள்ளது.
கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.2,000 வீதம் என்று மூன்று தவணைகளாக கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். இதற்கான அடுத்த தவணையை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, அடுத்த தவணைக்காகக் காத்திருந்தால், உங்கள் இ-கேஒய்சி ஐ காலக்கெடுவிற்குள் முன்பே அப்டேட் செய்ய வேண்டும்.
எனவே இது தொடர்பான விரிவான தகவளை நீங்கள் பிரதம மந்திரி கிசான் போர்டல் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில் பட்டியலில் உள்ள உங்கள் பெயர்களைச் சரிபார்க்க, பிரதம மந்திரி கிசான் யோஜனா மூலம் பயன்பெறும் விவசாயிகள் முதலில் பிரதம கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ க்குச் செல்ல வேண்டும். இங்கே விவசாயிகள் கார்னர் என்ற விருப்பம் தோன்றும். அதன் பிறகு பயனாளிகள் பட்டியல் என்ற விருப்பத்தில் புதிய பக்கம் திறக்கும். புதிய பக்கத்தில், உங்கள் மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்களை உள்ளிடவும்.
அதன் பிறகு கேட் அறிக்கைக்குச் செல்லவும். இங்கே நீங்கள் அனைத்து விவசாயிகளின் பட்டியலைப் பெறுவீர்கள். இதில் உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம் என்று குறிப்பிட்டனர்.