Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்சாதனங்கள்; மத்திய அரசின் அதிரடி உத்தரவு

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்சாதனங்கள்; மத்திய அரசின் அதிரடி உத்தரவு

By: Nagaraj Sat, 04 July 2020 08:29:43 AM

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்சாதனங்கள்; மத்திய அரசின் அதிரடி உத்தரவு

மத்திய அரசின் அதிரடி... சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, மின் சப்ளை சாதனங்கள் இறக்குமதி செய்ய, மின் வினியோக நிறுவனங்கள், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லடாக் பிரச்னைக்குப் பின், சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை சீன நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என, அத்துறை முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வே, 'சிக்னல்' திட்டம் தொடர்பாக, சீன நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங்., மாநில மின்துறை அமைச்சர்களுடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: இந்தியாவில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இருந்தும், ஆண்டுக்கு, 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதில், சீனாவின் பங்கு, 21 ஆயிரம் கோடி ரூபாய். இந்த அளவிற்கு வர்த்தக வாய்ப்பளிக்கும் நாட்டில், சீனா அத்துமீறியுள்ளதை ஏற்க முடியாது.

ministry of power,china,pakistan,permits,electricity ,மின்சார அமைச்சகம், சீனா, பாகிஸ்தான், அனுமதி, மின்சாதனங்கள்

அதனால், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, மின் சப்ளை சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம். தற்போது, பி.ஆர்., எனப்படும் முன்னுரிமை அந்தஸ்தின் கீழ், பக்கத்து நாட்டு பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இனி, சீனா, பாக்., பொருட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட மாட்டாது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மின் சாதனங்களில், 'மால்வேர் அல்லது ட்ரோஜன்' வைரஸ்கள் இருக்கலாம். அவற்றின் மூலம், எங்கிருந்தும், இந்திய மின் வினியோகத்தை முடக்கும் ஆபத்து உள்ளது. அதனால், மின் வினியோக நிறுவனங்கள், சீன நிறுவனங்களின் மின்சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம். அப்படியே இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், அதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்.

அவ்வாறு இறக்குமதியாகும் சாதனங்கள், ஆய்வு செய்யப்படும். அதில் திருப்தியில்லையெனில், திருப்பி அனுப்பப்படும். மத்திய அரசின், 'உதய்' உள்ளிட்ட மூன்று திட்டங்களில் இணைந்துள்ள மாநிலங்களில், மின் வினியோக நிறுவனங்களின் நிதியுதவிக்கு, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மின் வினியோக நிறுவனங்கள், இழப்பை குறைப்பதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, கடன் அல்லது மானியம் வழங்குவது நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், பாக்., சீன மின்சாதனங்கள் இறக்குமதிக்கு, மின் வினியோக நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணையை, மத்திய மின்சார அமைச்சகம், நேற்று மாலை வெளியிட்டது.

Tags :
|