- வீடு›
- செய்திகள்›
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் ... அபராதத் தொகையை செலுத்தாவிடில் வாகனம் பறிமுதல்
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் ... அபராதத் தொகையை செலுத்தாவிடில் வாகனம் பறிமுதல்
By: vaithegi Thu, 03 Nov 2022 9:44:13 PM
சென்னை: அபராதத் தொகையை செலுத்தாவிடில் வாகனம் பறிமுதல் .... மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. எனவே அதன் அடிப்படையில், தமிழக அரசும் போக்குவரத்து விதிமீறலுக்கு புதிய அபராதத் தொகையை வசூலித்து கொண்டு வருகிறது. புதிய சட்டத்திருத்தத்தின்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு கொண்டு வருகிறது.
ஆனால் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கி அபராதத் தொகை விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் பலர், ரசீதை பெற்றுக்கொண்டு அபராதத் தொகையை செலுத்தாமல் வாகனம் ஓட்டி கொண்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காண அபராதத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்நிலையில் நீதிமன்றம் வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மேலும் இதுபோன்று கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..