Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க பெண்ணுடன் தொடர்பு வைக்க இம்ரான்கான் விருப்பம் என டி.வி. பிரபலம் தகவல்

அமெரிக்க பெண்ணுடன் தொடர்பு வைக்க இம்ரான்கான் விருப்பம் என டி.வி. பிரபலம் தகவல்

By: Karunakaran Mon, 08 June 2020 11:58:35 AM

அமெரிக்க பெண்ணுடன் தொடர்பு வைக்க இம்ரான்கான் விருப்பம்  என டி.வி. பிரபலம் தகவல்

சமூக வலைத்தள பதிவுகளால் பிரபலமான அமெரிக்க பெண் சிந்தியா ரிச்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோ குறித்து டுவிட்டரில் அவதூறு பதிவை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் முன், அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், 2011-ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும், ஜனாதிபதி மாளிகையில் வைத்து, தன்னிடம் உடல்ரீதியில் தொடர்பு கொண்டதாக பெனாசிர் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி மீதும், முன்னாள் மந்திரியான மகதூம் சகாபுதீன் மீதும் குற்றம் சாட்டினார்.

cynthia richie,pakistan,imran khan,ali salim ,சிந்தியா ரிச்சி,பாகிஸ்தான்,இம்ரான்கான்,அலி சலீம்,

இது பாகிஸ்தானில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான்கான் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை சிந்தியா ரிச்சியின் நண்பரான பாகிஸ்தான் டி.வி. தொகுப்பாளர் அலி சலீம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அலி சலீம் கூறுகையில், சிந்தியா ரிச்சி ஒரு காலத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறினார். அதே நேரத்தில் முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் தன்னை பலாத்காரம் செய்தது பற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று கூறினார். இது தற்போது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :