Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிஜிட்டல் ரூபாய் வெளியீட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

டிஜிட்டல் ரூபாய் வெளியீட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

By: Nagaraj Tue, 29 Nov 2022 10:13:56 PM

டிஜிட்டல் ரூபாய் வெளியீட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

புதுடில்லி: 2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி டிஜிட்டல் ரூபாய் வெளியீட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் அதே மதிப்பில் சில்லறை பரிவர்த்தனைகளுக்காக டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ரூபாய்க்கு e₹-R குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.

december 1,digital currency,reserve bank, ,டிசம்பர் 1ம் தேதி அறிமுகம், டிஜிட்டல் ரூபாய், ரிசர்வ் வங்கி

முதல் கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் தொடங்கப்படும். பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கியும் விரைவில் இணையும்.

டிசம்பர் 1 ஆம் தேதி மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் மற்றும் விரைவில் அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

இதன் மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 ஆகிய மதிப்புகளில் டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்துக்கு வரும். 4 நகரங்களில் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :