பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்தது
By: Karunakaran Sun, 28 June 2020 11:19:42 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் பிரேசில் நாடு உள்ளது. தற்போது, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
பிரேசிலில், ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.