சென்னையில் கொரோனாவுக்கு 15,814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை
By: Monisha Wed, 15 July 2020 1:41:41 PM
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 79,662 ஆக உள்ளது. 15,814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 1,310 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 2,199 பேர்
அண்ணா நகர் - 1,560 பேர்
தேனாம்பேட்டை - 1,497 பேர்
தண்டையார்பேட்டை - 1,006 பேர்
ராயபுரம் - 1,214 பேர்
அடையாறு - 1,164 பேர்
திரு.வி.க. நகர் - 998 பேர்
வளசரவாக்கம் - 914 பேர்
அம்பத்தூர் - 943 பேர்
திருவொற்றியூர் - 608 பேர்
மாதவரம் - 438 பேர்
ஆலந்தூர் - 508 பேர்
பெருங்குடி - 353 பேர்
சோழிங்கநல்லூர் - 464 பேர்
மணலி - 280 பேர்