Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில், கடந்த 7 வாரங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிவர்களிடமிருந்து ரூ.5.94 கோடி அபராதம் வசூல்

சென்னையில், கடந்த 7 வாரங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிவர்களிடமிருந்து ரூ.5.94 கோடி அபராதம் வசூல்

By: vaithegi Tue, 14 Mar 2023 2:15:12 PM

சென்னையில், கடந்த 7 வாரங்களில்  குடிபோதையில் வாகனம் ஓட்டிவர்களிடமிருந்து ரூ.5.94 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை பல புதிய விதிகளை வகுத்துள்ளது. எனவே அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுயிருந்தது .

இதற்கு முன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோன்று முன்பு குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

drunkenness,fine ,குடிபோதை,அபராதம்

இதையடுத்து காருக்கும் இதே விதி பொருந்தும். அதாவது காரில் டிரைவர் மது அருந்தி இருந்தால், உடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இதனால் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை செலுத்தாவிட்டால் அவர்களது வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கோர்ட்டு மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

Tags :