Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

சென்னையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

By: Monisha Sat, 05 Dec 2020 10:29:39 AM

சென்னையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக நகரின் பல பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சென்னை கே.கே.நகர், வேளச்சேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட நகரின் பல இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலை பகுதி முழுவதும் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு மேல் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

chennai,residential,rainwater,stagnation,suffered ,சென்னை,குடியிருப்பு,மழைநீர்,தேக்கம்,அவதி

அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதவாறு தவிக்கிறார்கள். அப்பகுதியில் உள்ள கடைகளும் திறக்காமல் மூடியே கிடக்கின்றன. இதேபோல நகரின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள்.

மேலும் பள்ளிக்கரணை, முடிச்சூர், விளாங்காடுபாக்கம் போன்ற புறநகர் பகுதிகளிலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :