Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சத்தீஷ்கரில் தாய், தந்தை உள்பட 5 பேரை கோடரியால் வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை

சத்தீஷ்கரில் தாய், தந்தை உள்பட 5 பேரை கோடரியால் வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை

By: Karunakaran Sat, 25 July 2020 9:55:22 PM

சத்தீஷ்கரில் தாய், தந்தை உள்பட 5 பேரை கோடரியால் வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை

சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் மாட்டியாரி பகுதியில் ரூப்தாஸ் சூர்யவன்சி என்பவர் வசித்து வந்தார். அவருடைய மனைவி சந்தோ ஷி பாய். இவர்களுக்கு சூர்யன்வன்சி என்பவர் உள்பட 4 பிள்ளைகள் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் அனைவரும் வீட்டில் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தபோது, சூர்யன்வன்சி திடீரென தூங்கி கொண்டிருந்த தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் ரோகித்(20), ரிஷி(15), தங்கை காமினி(18) ஆகியோரை கோடரியால் கண்மூடித்தனமாக வெட்டி கொலை செய்தார். இதனால் ஐவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

chhattisgarh,stabbing,5 people,suicide ,சத்தீஸ்கர், கோடரி, 5 பேர் கொலை, தற்கொலை

வீட்டில் இருந்து வெளியே சென்ற சூர்யன்வன்சி, ஒரு கனரக வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பின் போலீசார் அங்கு வந்து 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சூர்யன்வன்சி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Tags :