Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: vaithegi Tue, 02 Aug 2022 9:11:53 PM

சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங்: உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பெரும் தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 393 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,china,infection,symptoms ,கொரோனா ,சீனா,தொற்று ,அறிகுறிகள்

இதை அடுத்து இதில் 309 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

மேலும் சீனாவில் இதுவரை மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,29,594 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|