- வீடு›
- செய்திகள்›
- வரவிருக்கும் ஆண்டுகளில் BA மற்றும் B.Sc பாடத்திட்டத்திற்கும் நுழைவுத்தேர்வு இருக்கலாம்
வரவிருக்கும் ஆண்டுகளில் BA மற்றும் B.Sc பாடத்திட்டத்திற்கும் நுழைவுத்தேர்வு இருக்கலாம்
By: vaithegi Tue, 31 Oct 2023 12:47:01 PM
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கல்வியின் வளர்ச்சி உயர்ந்து வரும் நிலையில் மேற்படிப்பு பயில்வதற்காக பல தகுதித்தேர்வு எழுத வேண்டியுள்ளது.
இதையடுத்து தற்போதைக்கு மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு தகுதித்தேர்வு இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் BA மற்றும் B.Sc உள்ளிட்ட கலை, அறிவியல் பாடத்திட்டம் பயில்வதற்கும் தகுதித்தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
மேற்படிப்பில் சரியான துறையை தேர்ந்தெடுத்து மென்மேலும் வளர்ச்சியடைவதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக கற்று தெரிந்திருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரைகள் அவர் வழங்கியுள்ளார்.
மேலும், இது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த ஆண்டுகளில் 3,5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த துறையாக இருந்தாலும் அறிவை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம் என மாணவர்களிடம் அறிவித்துள்ளார்.